யாழ். மானிப்பாயில் சிறீலங்கா காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

மானிப்பாய் பகுதியில் இன்று (20) இரவு உந்துருளிகளில் சென்றவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தூப்பாக்கிப் பிரயோகத்தில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் தகவலக்கள் தெரிவிக்கின்றன.

மானிப்பாய் கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிக்கு அருகாமையில் உள்ள இணுவிலுக்கு செல்லும் வீதியால் வாள் போன்ற ஆயுதங்களுடன் மூன்று உந்துருளிகளில் சென்ற 6 பேர் கொண்ட குழுவினரை சிறீலங்கா காவல்துறையினர் நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

manipay 2019 யாழ். மானிப்பாயில் சிறீலங்கா காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் - ஒருவர் பலி