யாழ்.பல்கலையில் தடைகளை மீறி கறுப்பு ஜூலை நினைவுகூரல்

1983 இல் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நாள் இன்றாகும்.
இதனை தாயகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் துயருடன் நினைவு கூறுகின்றனர்.

இந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளையும் மீறி இந்த நாளை பல்கலைக்கழக வளாகத்தில் நினைவு கூறுகின்றனர். இதனைத்தடுக்க சிறிலங்கா படையினர் அங்கு விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.