யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்   யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 462 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 743 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 566 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை,  அவர்களில், இன்னும் ஐயாயிரத்து 672 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 430 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.