யாழில் அகப்பட்ட வெளிமாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தமோ பிற தேவைகளுக்காகவோ சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாது தவிப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தமது பகுதிகளில் உள்ள கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பதிவு செய்யும் நபர்களின் உடல் நிலை குறித்த சான்றிதழ்களை கையளிப்பார்கள்.

பின்னர் இராணுவத்தினர் தமது பாதுகாப்புடன் குறித்த நபர்களை தத்தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்று தெரியவருகிறது.

இந்நிலையில் உணவு உட்பட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த விடயம் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளில் ஈடுபடுதவதன் மூலம் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளலாம் என்று தெரியவருகிறது.