முகாம் அமைந்திருந்த பகுதியில் வெடித்த மர்மப் பொருள்; இரு சிறுவர்கள் காயம்

செட்டிகுளம் -வாழவைத்தகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிவிபத்தில் சிறுவர்கள் இருவர் காயமடைந்து வயவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. அந்த பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் அமைந்திருந்த இராணுவ முகாமுக்கு அண்மையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் மர்மப்பொருள் ஒன்றை எடுத்துச்சென்று சுத்தியல் ஒன்றினால் அடித்துள்ளனர்.

அதன்போது அந்தப் பொருள் திடீர் என்று வெடித்துள்ளது. சிறுவர்கள் காயமடைந்த நிலையில் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டுச் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தனர். இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்கா வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் சனாஸ் (வயது – 12) முகமட் ராசித் (வயது -16) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.