கொக்குவிலில் நேற்றிரவு இரு ஓட்டோக்கள் மோதி விபத்து! மூவர் படுகாயம்

யாழ் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில. இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமைடைந்துள்ளனர்.

யாμப்பாணத்தில் இருந்து காலிகேசன்துறை வீதியூடாக தாவடி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி கொக்குவில் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் இரு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற முச்சக்கர வண்டியை ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.