மிலிந்த உட்பட எட்டு புதிய தூதுவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற குழு அங்கீகாரம்

இந்தியாவுக்கான புதிய தூதுவராக மிலிந்த மொரகொடவை நியமிப்பது உட்பட எட்டு புதிய தூதுவர்களை நியமிப்பதற்கு உயர் பதவிகள் குறித்த பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது.

இதன்படி பின்வரும் நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

சி.ஏ.சந்திரபெரும – ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி
மிலிந்த மொரகொட – இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர்
ரவிநாத ஆரியசிங்க – அமெரிக்காவுக்கான தூதுவர்.
எஸ்.அமரசேகர – தென்னாபிரிக்காவுக்கான உயர் ஸ்தானிகர்.
றியர் அட்மிரல் ஹரிச்சந்திர சில்வா – ஆப்கானிஸ்தான்
விஸ்ராமல் எஸ்.குணசேகரா – ஜப்பான்
பேராசிரியர் கனிஷ்கா ஹிரிமுரிகம – பிரான்ஸ்
டாக்டர் பாலித கொஹண – சீனா