மிருசுவிலில் வாள்வெட்டில் ஒருவர் பலி

மிருசுவில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.