மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் கருத்து

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் பல சிக்கல் தோற்றம் பெறும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு விதப்புரை அறிக்கை சமர்ப்பித்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.தேர்தலை நடத்துவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சபையில் புதன்கிழமை (10) தெரிவித்தார்.

இந்நிலையில், அரச நிதியை சேமிப்பதற்காக தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியமும்,உலக வங்கியும் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதா ? என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க , பிரதமர் ஹரிணியிடம் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.