மலேசியாவிற்குச் சென்ற இலங்கையர் 1,608 பேர் மீண்டும் நாடு திரும்பி அனுப்பப்பட்டனா்

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் மேற்படி 1,608 பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.