மன்னார் தாரபுரத்தில் 8 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு..!

மன்னார் – தாராபுரம் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு குடும்பங்கள் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் டீ.வினோதன் தலைமையில் இன்று காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதிக்கு அண்மையில் புத்தளத்திலிருந்து சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தாராபுரம் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளத்தில் கொரோனா தொற்று உறுதியானவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இரண்டு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் குறித்த குடும்ப உறுப்பினர்களுக்;கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் தாராபுரம் பகுதியில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொரடர்பாளர் குறிப்பிட்டார்.
தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், காவல்துறையினரும்; இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது