மன்னார் புதைகுழி அறிக்கை சர்ச்சைக்குரியதாகின்றது

மன்னார் சதொச பகுதியில் மீட்கப்பட்ட மனித புதைகுழியின் எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதன் அறிக்கை தொடர்பாக களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புளோரிடா காபன் அறிக்கையின் பிரகாரம் குறித்த மனித எச்சங்கள், கி.பி.1404 முதல் 1635 வரையான காலத்திற்குரியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் 231 ஆண்டு இடைவெளியுள்ளதை சுட்டிக்காட்டிய ராஜ் சோமதேவ, இது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளார்.