மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டார் பிள்ளையான்

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேற்று மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.

விளக்கமறியலிலுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு கடந்த புதன்கிழமை மாலை அழைத்துவரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.