மட்டக்களப்பில் ஆலயம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்தப்படும் என்ற சந்தேகத்தில்  மட்டக்களப்பில் சில ஆலயங்களுக்கும்  நாடாளுமன்ற ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

01 மட்டக்களப்பில் ஆலயம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் திலீபனை மட்டக்களப்பு நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நினைவுகூரமுடியாது என்ற தடையுத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.

02 மட்டக்களப்பில் ஆலயம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்துவதற்கு எதிரான தடையுத்தரவு  காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

கல்லடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும் கொக்கட்டிச்சோலையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடாத்தமுடியாது என்ற தடையுத்தரவு நீதிமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.