மக்களுக்கான நிவாரண தொகையை 3 நாட்களில் வழங்க தீர்மானம்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை 8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் வழங்கி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகராட்சி ஆணையாளர் சம்பிகா ரோஷினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாதத்திற்கான நிவாரண தொகையை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.