மகாண சபைத் தேர்தல்களுக்கு முன் ஓய்வு பெறப்போவதில்லை ; விமலுக்கு தேசப்பிரிய பதில்

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக் குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது, என வீரவன்ஸ தெரிவித்தமை காரணமாக மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற மாட்டேன் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லது, என வீரவன்ஸ ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஒரு மாதத்துக்கு முன்பே ஓய்வு பெற திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக மாகாண சபை தேர்தல் முடியும் வரை ஒருபோதும் ஓய்வுப்பெறமாட்டேன்” என்றார்.