பௌத்த துறவிகளின் பாலியல் துன்புறுத்தல்களை மறைத்த ரணில்

சிறீலங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களில் பணியில் உள்ள பௌத்த துறவிகளில் 90 விகிதமானவர்கள் பிரதம துறவிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுவருவதாக சிறீலங்கா அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் பௌத்த மகாசங்கத்தினரின் மனம் நோகும்படி பேச வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்கா ராமநாயக்காவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதும் பிரதம பௌத்த துறவிகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய துறவிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தான் ரணிலிடம் காண்பித்ததாகவும், அவர் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் இவ்வாறு தவறாக நடக்கும் துறவிகளிடம் மன்னிப்புக் கேட்கப்பேவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் உள்ள பௌத்த துறவிகள் அதிக வன்முறைகளில் ஈடுபட்டுவருவதாகவும், இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் இனஅழிப்பு நடவடிக்கைகளில் அவர்களே முன்னனியில் இருப்பதாகவும் கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசியலில் அதிக செல்வாக்குகளை செலுத்திவரும் துறவிகள் மத போதனைகளை விட அரசியல் மற்றும் ஏனைய இனங்கள் மீதான வன்முறைகளையே அதிகம் தூண்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.