போர்க்குற்றவாளியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலம் ஜூன் 22 முடிவடைவதாக இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் அவரின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் சமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சில்வா மீது அனைத்துலக நாடுகளில் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகையில் சிறீலங்கா அரசு தொடர்ந்து அவற்றைப் புறக்கணித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.