போகம்பறை சிறையில் உள்ள கைதிகள் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம்

கண்டி- போகம்பறை சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் கட்டட கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை தாமதமாகிறது என தெரிவித்தே  கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக்கச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலை ஆணை யாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலை கைதிகளுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரி வித்துள்ளார்.