பொறுப்பான எவரினதும் பிரசன்னம் இன்றி அவசரகாலாச் சட்ட விவாதம் – கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பு

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அனுமதியை பாராளுமன்றம் நேற்று வழங்கியது. மிகக்குறைந்தளவான உறுப்பினர்களே சமூகமளித்திருந்த நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் கிடைத்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சபையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான சபைநடவடிக்கைள் இடம்பெற்றபோது பாதுகாப்பு அமைச்சரோ,இராஜாங்க அமைச்சரோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிவுகளும் கூட அங்கிருக்கவில்லை.

அங்கு உரையாற்றிய சபைமுதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது சம்பிரதாயப்படி முப்படைய அதிகாரிகள்,காவல்துறை தரப்பு மற்றும் பாதுகாப்புச் செயலாளர் சபையில் சமுகமளித்திருக்க வேண்டும். அவர்கள் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும். ஆனால் இம்முறை ட்டுமல்ல கடந்தமுறையும் சமூகம் தரவில்லை.இவர்கள் ஏன் இவ்வாறுசெய்கின்றனர் எனது தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.