ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவுஇன்று வெளியிடப்படவுள்ளது.
இன்று பி.ப 3மணிக்கு உயர்நீதி மன்றத்தின் முடிவு அறிவிக்கப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மனுக்கள் மீதான விசாரணை நேற்று 10 ஆவது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.