பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாடுகளிலிருந்து 15 பேர் வருகின்றார்கள்

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாடுகளை சேர்ந்த 15 கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாக “பவ்ரல்” அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள பல நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அழைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் “பவ்ரல்’ தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ள “பவ்ரல்” அமைப்பு இலங்கையின் சுகாதார வழிகாட்டுதல்களின் படி இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.