பொதுத்தேர்தல் மேலும் காலதாமதமாகலாம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் மேலும் காலதாமதமாகலாம் எனவும் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது அதற்கு பின்னர் பிற்போடப்படலாம் எனவும் சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலை மிக விரைவாக நடத்தும்படி சிறீலங்கா அரச தலைவரின் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துவருகின்ற போதும், தற்போதுள்ள நிலையில் சுகாதார அமைச்சின் விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்துவது என்பது அதிக காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை (8) தேர்தல் திணைக்களம் இது தொடர்பில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் நாள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.