பெரும் குற்றம் புரிந்தவர்களுக்கு விடுதலை இல்லை சஜித் பிரேமதாசா

பெரும் குற்றம் புரிந்த எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

“இளைஞர் குழுவுடன் சஜித் பிரேமதாசா“ என்ற தலைப்பில் இன்று(12) இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவறறை ஆரம்பித்து அதனை வளர்த்தவர்கள் மற்றும் கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியான பின்னர் நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன்.

ஒவ்வொருவரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன்“ என சஜித் பிரேமதாசா கூறினார்.