புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் ஒருவர் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் வாகன மறுசீரமைப்பு மேற்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர்.

14ஆம் திகதி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முஹமது ஆதம் லெப்பே என்பவரிடமிருந்து பெறப்பட்ட வரைபட தகவல்களில் இவர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் S.P. ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புனித அந்தோனியர் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்  விசேட அதிரடிப்படையின் (STF) சிறப்பு வெடிகுண்டு அகற்றும் பிரிவினரால் வாகனம் சோதனையிடப்பட்டு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

சந்தேக நபரை கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் பெறப்பட்ட வரைபட உதவியுடன் வாகன (இலக்கம் WP-PJ 4080) உரிமையாளர்,  அப்துல்லா என அழைக்கப்படும் முகமது அஸ்ஸம் முஹம்மது முபாரக் என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் வெடித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபரும், வாகன உரிமையாளரும், வாகனங்களை மறுசீரமைப்பு செய்யும் மற்றொரு நபரும் இச்சம்பங்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றவியல் விசாரணைப் பிரிவினரின் விசாரணைகள் தெரிவித்தன.