புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் நிகழ்ந்த சோகம்! நால்வரின் நிலை!

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானில் இருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த வானில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களிற்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
viber image 2019 12 31 21 36 54 புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் நிகழ்ந்த சோகம்! நால்வரின் நிலை!

viber image 2019 12 31 21 36 55 1 புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் நிகழ்ந்த சோகம்! நால்வரின் நிலை!

viber image 2019 12 31 21 36 59 புத்தாண்டு தினத்தில் வவுனியாவில் நிகழ்ந்த சோகம்! நால்வரின் நிலை!