பிரித்தானியாவில் மேலும் ஒரு தமிழ் மருத்துவர் பலி

லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த விஷ்ணு ராசையா (வயது – 48) என்ற இளம் தமிழ் மருத்துவர் இன்று (24.04.2020) கொரோனா நோய்க்கு பலியானார்.

மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார்.  மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.