பாராளுமன்றத்தினை மீளக் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை தாம் இதுவரை பயன்படுத்தவில்லையென்றும் தேவைப்படின் அதனை பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு அழுத்தங்களை வழங்க எவரும் முயற்சிக்கக் கூடாது.
பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுமாறு நீதிமன்றம் சொன்னாலும் நான் மீண்டும் ஒத்திவைப்பேன். அல்லது கூட்டும் வர்த்தமானியை விடுத்து மீண்டும் கலைப்பேன். இந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரைக்கும் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அரசியலமைப்பின்படி என்ன செய்யமுடியுமோ அதனை நான் செய்வேன். நாட்டின் தற்போதைய நிலைமையில் யாரும் தேவையற்ற அரசியலை செய்யக் கூடாது” என்றும் இங்கு குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி.