பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கப்போவதில்லை- மைத்திரி

தான் பதவியில் இருக்கும் வரைக்கும் எந்தவொரு வௌிநாட்டு படையினரையும் நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.