படையினரின் தொடரும் காணி அபகரிப்பு-மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தனியார் காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது.

மாதகல் பொன்னாலை வீதி சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் நேற்று தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்தது. இதையறிந்த உள்ளூர் மக்கள் காலை 8 மணியளவில் அப்பகுதியில் திரண்டனர்.