சிறீலங்காவின் படைக் கட்டமைப்பில் மாற்றங்கள்

இந்த மாதம் சிறீலங்காவின் படைக்கட்டமைப்பில் இரு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் சேவைக்காலம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  தற்போதைய கூட்டுப்படைத் தளபதியாகவுள்ள அட்மிரல் ரவி விஜேகுணரத்னவின் சேவைக்காலம் இம்மாதம் 22ஆம் திகதி நிறைவடையவுள்ளது. புதிய கூட்டுப்படைகளின் தளபதியின் பதவிக்காலம் இம்மாதம் நிரப்பப்படவேண்டியுள்ளது.

இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ஆம் திகதி சிறிலங்காவின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.  இவருக்கு 55 வயது நிறைவடைவதையடுத்து 2017 ஓகஸ்ட் 18ஆம் திகதி ஓய்வபெறவிருந்தார். ஆனால் ஜனாதிபதியின் அதிகாரத்தினால் இவரின் பதவிக் காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டது.   இதனையடுத்து 2018 ஓகஸ்ட் வரை இராணுவத் தளபதியாக பதவி வகிக்க அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இரண்டாவது தடவையாக ஒருவருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. அந்தப் பதவி நீடிப்பு இம்மாதம் 18ஆம் திகதி முடிவடையவுள்ளது.

இந்த இருவரின் பதவி வெற்றிடங்களும்  இந்த மாதம் நிரப்பப்பட வேண்டியுள்ளது.