நெருக்கடிக்குள் மைத்திரி; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளிவரவுள்ள ஆவணங்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்கத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாகச் சிறையிலிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜிதஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோர் பிணையில் விடுலையாகியுள்ள நிலையில், குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட ஆவணங்கள் சிலவற்றை வெளியிடஅவர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த இருவரும் சில இரகசிய ஆவணங்களை ஒப்படைத்துள்ள நிலையில் அந்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த அவர்கள் முடிவெடுத்துள்ளனராம்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் தாம் அறிவித்த ஆவணங்களையே இந்த இருவரும் பகிரங்கப்படுத்தவுள்ளனர் என அறிய முடிகிறது