தோல்வியடையும் கூட்டணிக்குத் தலைமைதாங்க தயாரில்லை: ரணில்

சஜித் ஆதரவாளர்கள் இணைந்து ஏற்படுத்தப் போகும் கூட்டணி தோல்வியைச் சந்திக்கப்போவதை நான் அறிவேன்.தோல்வியடையும் கூட்டணிக்கு தலைமை வகிக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அதனை விட்டுக்கொடுத்தேன்.

இவ்வாறு தனது நெருக்கமான சகாக்கள் பலருடன் மனம்விட்டுப் பேசும்போது தெரிவித்துள்ளாராம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைவது குறித்து தனது நெருக்கமான சிலருடன் பேசிய ரணில் மேலும் கூறியவை வருமாறு:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிதானமாக ஒரு முடிவை எடுக்காமல் வெளியாரின் அழுத்தங்களால் முடிவுகள் எடுக்கப்பட்டமையால் தோல்வியைச் சந்தித்தோம்.இம்முறையும் அது தொடர்கிறது. எனவேதான் தோற்கப்போகும் கூட்டணிக்குத் தலைமை வகிக்க நான் விரும்பவில்லை.

அந்த கூட்டணி தோற்றால் அது அஸ்தமனமாகிவிடும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேட்புமனுக் குழுவின் தலைவர் பதவியையும் சஜித்துக்கு கொடுத்துள்ளேன். அவர்கள் அநீதியாக தீர்மானங்களை எடுத்தால் நானும் அப்போது தீர்மானங்களை எடுப்பேன். கூட்டணியின் முக்கிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் அதன் செயலாளராக ரவி கருணாநாயக்கவை நியமிக்க நான் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.
இதற்கிடையில் பெளத்த வாக்குகளை குறிவைத்து
களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாஸ அணி, வரும்
தேர்தலில் தென் பகுதிகளில் நடைபெறும் எந்தக்
கூட்டங்களுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்
களை மேடையேற்றாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக
அறியமுடிந்தது.