தேர்தல் முடிவுகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட மாட்டாது – தேசப்பிரிய

சஜித் பிரேமதாசாவையும், கோத்தபயா ராஜபக்ஸவையும் ஆதரித்த  4 ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அரச ஊடகங்களான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் தனியார் ஊடகங்களான ஹிரு, தெரண ஆகியவை தேர்தல் விதிகளை மீறி, வேட்பாளர்களை ஆதரித்திருந்தன.

அரச ஊடகங்கள் இரண்டும் சஜித் பிரேமதசாவையும், தனியார் ஊடகங்கள் இரண்டும் கோத்தபயா ராஜபக்ஸவையும் ஆதரித்திருந்தன.

இவ்வாறு தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்ட இந்த 4 ஊடகங்களிற்கும் தேர்தல்முடிவுகள் வழங்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.