தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை அடுத்த 14 நாட்களுக்குத் தொடரும் என சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்று யாழ். நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.