திலீபன் நினைவு நிகழ்விற்கு தண்ணீர் வழங்கியவர்களை தேடும் சிஐடியினர்

2019ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினம் நல்லூரில் அமைந்துள்ள அவரின் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு தண்ணீர் வழங்கியவர்களையும், தண்ணீர் வழங்குவதற்கு அனுமதி கொடுத்தவர்களையும் தேடி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிசார் (CID) விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நினைவு தினத்தன்று உழவு இயந்திரத்தில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு வீதிக்குத் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும், இந்த உழவு இயந்திரம் யாழ். மாநகரசபைக்கு சொந்தமானது எனவும் CIDயினர் கூறுகின்றனர்.

அந்த உழவு இயந்திர நீர்த்தாங்கியை வழங்கியது யார்? யாரின் அனுமதியுடன் அந்த உழவு இயந்திரம் வழங்கப்பட்டது? போன்ற தீவிர விசாரணைகளில் CIDயினர் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு யாழ். மாநகரசபை ஆணையாளரை எழுத்து மூலம் கோரியுள்ளனர்.