மேற்கத்திய காலனித்துவ சக்திகளால் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஆப்பிரிக்கா மீட்டெடுக்க வேண்டும். திருடப்பட்டவை கலாச்சார கலைப்பொருட்கள் மட்டு மன்றி, எமது கண்ணியம், சுதந்திரம் மற்றும் பொருளாதார கட்டமைப் பும் ஆகும் என்று மொசாம்பிக் வெளியுறவு அமைச்சர் மரியா மானுவேலா லூகாஸ் செவ்வாய ன்று (22) கூறினார்.
மாஸ்கோவில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ் ரோவுடன் பேசிய அவர், வரலாற்று அநீதிகளை மேற்கத்திய சக்திகளின் இழப்பீட்டு நடவடிக்கைகள் மூலமாக மட்டுமல்லாமல், கட்ட மைப்பு சீர்திருத்தங்கள் மூலமும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள் ளார்.
ஆப்பிரிக்காவின் இறையாண்மை திரும்புவதற்கான முயற்சி, அருங்காட்சியகப் பொருட் களை திருப்பி அனுப்புவதைத் தாண்டி, ஆப்பிரிக்க கண்டம் உலகப் பொருளாதாரத்தில் எவ்வாறு பங்கேற்கிறது என்பதைப் பொறுத்தது. இதில் மூலப்பொருட்கள் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் உள்நாட்டு பங்களிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் முதலீடு செய்வது ஆகியவை அடங்கும்.
“நாங்கள் ஆப்பிரிக்கர்களாக உணர விரு ம்புகிறோம், ஆப்பிரிக்கர்களாக வேலை செய்ய விரும்புகிறோம், ஆப்பிரிக்கர்களாக இருக்க விரும்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 800 கலாச்சாரப் பொருட் களை, மே மாதத்தில் மொசாம்பிக் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர் ந்து அவரது கருத்துக்கள் வெளிவந்தன. இந்த பொருட்களை மீட்டெடுப்பது கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பதற்கு மிக முக்கிய மானது என்று கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் சமாரியா டோவேலா தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில், நெதர்லாந்து மனித மற்றும் விலங்கு உருவங்கள், தகடுகள், அரச சின்னங்கள் மற்றும் வரலாற்று மணி உள்ளிட்ட 119 கலைப்பொருட்களை நைஜீரியாவிற்கு திருப்பி அனுப்பியது. அவை, ஒரு நூற்றாண்டுக் கும் முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை.