தமிழ் மக்களின் கலாச்சாரங்களை சீரழிப்பதில் பௌத்த துறவிகளின் வழியில் முஸ்லீம் இளைஞர்கள்

தமிழ் மக்களின் கலாச்சாரங்களை சீரழிப்பதில் பௌத்த துறவிகளின் வழியில் முஸ்லீம் இளைஞர்களும் ஈடுபட்டு வருவதால் தமிழ் மக்கள் அச்சதில் உள்ளனர். அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் மக்களின் சமய கலாச்சாரங்களை இழிவுபடுத்திய பௌத்த துறவிகள் சைவ ஆலயத்தில் இறந்த பௌத்த துறவியின் சடலத்தை எரித்திருந்தனர்.

தற்போது மட்டக்களப்பில் நவராத்திரி விழாவின் போது முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் மக்களை இழிவு படுத்தும் செயலைச் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள கல்வியியல் கல்லூரியில் நவராத்திரி
பூஜையின்போது சில முஸ்லிம் இளைஞர்கள் குழப்பங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை (8) தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் மாணவர்களினால் இறுதி நவராத்திரி தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வழமையாக கல்லூரியில் நவராத்திரி பூஜைகள் நடைபெறும்போது அனைத்து மாணவர்களும் இந்து மதத்தின் அனுஸ்டானங்களை மதித்தே கலந்துகொள்வர்.

இங்கு மதவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மாணவர்களும் இணைந்து செயற்படும் நிலை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் சில முஸ்லிம் மாணவர்கள் சாரண்களை அணிந்துகொண்டு குறித்த நவராத்திரி பூஜை செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த மாணவர்கள் இது ஒரு மதத்தின் அனுஸ்டானம் எனவே அதற்கு ஏற்றாற்போல் உடையணிந்துவரவேண்டும் சாரணுடன் வரமுடியாது என கோரியுள்ளனர்.

எனினும் இந்த மாணவர்களின் செயற்பாடுகளுக்கு அங்கு விரிவுரையாற்றும் முஸ்லிம் விரிவுரையாளரும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது குறித்த மாணவர்களை அங்கிருந்துசெல்லுமாறும் கலாசார உடையுடன் வருமாறும் மாணவர்கள் தொடர்ச்சியாக தெரிவித்தபோதிலும் அவர்கள் கவனத்தில் கொள்ளாமல் தங்களது கலாசார உடையுடனேயே இருப்போம் என தெரிவித்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.