தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது – தயாசிறீ

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறீ ஜெயசேகரா நேற்று (12) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கருத்து வழக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனியான பிரதேச செயலகத்தை வழங்குவதற்கு உறுதி வழங்கிய ரணில் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் ஒவ்வொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

தற்போதைய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில் தான் இயங்கி வருகின்றது. எனவே ஐ.தே.க – த.தே.கூ அரசு என நாம் அதனை அழைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.