தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு அரசாங்கம் வழிவிடவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நடைபெற்றன.
இதில் மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுத்தூபியில் இன்று காலை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூருவதற்கு இன்று காவல்துறையினர், படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதே போன்று தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கும் அரசாங்கம் வழிவிடவேண்டும்.