தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை அவசியம்

தமிழ் தலைமைகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை காணப்படுவதால், தமிழர்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை அவசியம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ரணில் விக்கிரமசிங்கவிடம் சரணடைந்து விட்டதாகவும், வடக்கிலுள்ள தமிழ் தலைமைகள் தங்களுக்குள் அடிபடுவதை தென்னிலங்கையிலுள்ள சில சிங்கள கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.