தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோடியக்கரையிலிருந்து பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான படகில் 4பேர் நெடுந்தீவிற்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடறபடையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது.

இதற்கமைவாக இன்று மீனவர்கள் விசைப்படகுடன் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.