தமிழக சிறைத்துறை அதிகாரி, மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றம்

தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர்  31.05 வழங்கியுள்ளார்.

இதற்கமைவாக தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரி இருந்த அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பிரதி காவல்துறை    சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் பிரதி காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இப்போது தேர்தல் முடிவடைந்ததால், இவர் மீண்டும் சிறைத்துறைக்கு செல்லாது மண்டபம் அகதி முகாமிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.