தமிழகத்தில் வௌவால்களில் கொரோனா தொற்று.

தமிழகம் உட்பட 4 மாநில வௌவால்களில் கொரோனா தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கிடையே நான்கு மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வௌவால்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது. பொதுவாக வௌவால்கள் பரந்த அளவிலான கொரோனா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்றும், வௌவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ கொரோனாவை பரப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் அறிக்கையின்படி, ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு வகையான வௌவால்களின் தொண்டையில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், கேரளா, இமாசலப்பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற 4 மாநிலங்களின் வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வௌவால்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.