தனது பாதுகாப்புக்கு புதிய படையை உருவாக்குகிறார் கோத்தா

சிறீங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பில் சிறீலங்கா மக்கள் கட்சி பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

50 இற்கு மேற்பட்ட ஒய்வுபெற்ற சிறீலங்கா படையினரைக் கொண்டு இந்த பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளது. தேர்தலின் போது கோத்தபாயாவுக்கு பாதுகாப்பு வழங்குவதே அவர்களின் பிரதான கடமையாகும்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்புக்கள் போதுமானதல்ல, எனவே தான் கட்சி சிறப்பு பாதுகாப்பு பிரிவை உருவாக்கியுள்ளது. கோத்தபாயா ராஜபக்சா இராணுவத்தில் இருந்த போது அவரின் படையணியாக கருதப்பட்ட கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த படையினரைக் கொண்டே இந்த பi-டயணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னாள் அரச தலைவரும், கோத்தபயாவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சாவின் மகன்களில் ஒருவரான ஜோசித ராஜபக்சா மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.