தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று -மட்டக்களப்பில் அஞ்சலி

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

IMG 0116 1 தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று -மட்டக்களப்பில் அஞ்சலி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு நினைவுதினம் மட்டும் சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு நடாத்தப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG 0137 தந்தை செல்வாவின் 44வது நினைவு தினம் இன்று -மட்டக்களப்பில் அஞ்சலி

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.