தடுப்பூசிகளின் விலை விபரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்; சினோவாக் நிறுவனம்

இலங்கை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பட்சத்தில் தடுப்பூசி குறித்த விலை விபரங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது அது குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என சினோவாக் நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விலை குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்பட்டாலோ அல்லது அது குறித்து பொதுவெளியில் பேசினாலோ இலங்கை அரசாங்கத்துடனான உடன்படிக்கை நிறுத்தப்படும் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீன நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ள தனியார் நிறுவனத்தின் தலைவர் வி நடராஜா தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமனவிற்கு 13ம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சீனாவிடமிருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்படும் விலைகள் குறித்து சர்ச்சை நிலவுகின்ற சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியை பஙகளாதேசிற்கு வழங்கியதை விட அதிக விலையி;ல் இலங்கைக்கு சீனா வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.