ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் மகிந்த தேசப்பிரிய

தற்போதைய கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையால் பிற்போடப்பட்டிருந்தது.

ஆனால் பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் பிற்போட முடியாது என எழுந்த வாதங்களையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு பலருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேச்பபிரிய அறிவித்துள்ளார்.