சோலாரில் இயங்கும் துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்த மாணவன்

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் 13 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் சோலார் சக்தியில் இயங்கும் துவிச்சக்கர வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மேற்படி மாணவன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 8ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் சுந்தரலிங்கம் பிரணவன் என்பவராவார். இவரின் கண்டுபிடிப்பு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடியவை என்று அறிவிக்கப்படுகின்றது.