சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் “Structures of Tamil Eelam: A Handbook” எனும் நூல் உத்தியோகபூர்வமாக நேற்று மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சைவநெறிக்கூடத்தின் தமிழர் களறியினரால் தமிழ் ஆவணக் காப்பகமும், நூல்நிலையமும் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் முதலாவது பிரதி தேசத்திற்காக களமாடி உயிர்தத வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு காணிக்கையாக்கப்பட்டது. அத்துடன் கல்வி, ஆன்மீகம்,போராட்டம் சார்ந்து பணியாற்றியோருக்கு சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இந்நூலின் ஆக்கம் தொடர்பாகவும் அதன் தேவை தொடர்பாகவும் அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது இந்த இளையோரின் முயற்சிக்கான அங்கீகாரத்தையும் வாழ்த்தினையும் மக்கள் தமது கரகோசத்தினால் அடிக்கடி வெளிப்படுத்தியத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்நூலின் ஆக்கத்துக்காக உழைத்தவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளியீட்டுக்கு ஆர்வம் காட்டி ஆதரவுதந்த ஊடகத்துறையினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
அத்தோடு இந்நூலின் இரண்டாவது பதிப்பை உருவாக்கும்போது பலதரப்பட்டவர்களிடமிருந்தும் குறிப்பாக அவ்வத்துறைகளில் பணியாற்றிய போராளிகளிடமிருந்து மேலும் தகவல்கள் பெறப்பட்டு
இந்த நூல் மேலும் தாக்கமானதாக வெளிவர நடவடிக்கைகள் மேற்றக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்வமுடன் ஏராளமான நூல்கள் வாங்கிச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.